திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலையில் உள்ள இயேசுவின் திரு இருதய அற்புத கேபியில் 96வது ஆண்டு பெருவிழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு காலை மற்றும் மாலையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இந்த நிலையில் கோவில் வளாகத்தில் சப்பர பவனி நடந்தது. இதில் திரளான இறை மக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.













