ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலவரத்தை அறிய 9 கட்சித்தலைவர்களுடன் ஜம்மு காஷ்மீருக்கு புறப்படவிருப்பதாக ராகுல் காந்தி நேற்று முன்தினம் தெரிவித்தார்.
அதற்கேற்ப அவருடன் இ.கம்யூனிஸ்ட் ராஜா, திமுக எம்.பி. சிவா, சரத் யாதவ், ஆனந்த் சர்மா, திரிவேதி, குபேந்திர ரெட்டி உள்ளிட்ட 9 கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் இன்று காலை 11.30 மணிக்கு டெல்லி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டனர்.
இவர்கள் வருகையை எதிர்பார்த்து ஸ்ரீநகர் விமான நிலையத்தில் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து அவர்களை திருப்பியனுப்ப ஏற்பாடு நடக்கிறது. காஷ்மீரில் இயல்பு நிலை நிலவுவதாக அரசு கூறினாலும், இன்னமும் அங்கு பதற்றமே இருப்பதாக தெரிகிறது. நேற்று இளைஞர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையே மோதல் நடந்துள்ளது.
குலாம் நபி ஆசாத், ‘ இயல்பு நிலை நீடித்தால் அரசியல் தலைவர்கள் ஏன் வீட்டுக்காவலில் இருக்கிறார்கள்? ’ என கேட்டுள்ளார்.