அத்திவரதர் தரிசனத்தின் கடைசி நாட்களில் பக்தர்கள் நிழலில் நின்றபடி வரிசையா வருவதற்கு வசதியா 2 கி.மீ. தூரத்துக்குப் பந்தல் போடப்பட்டது. அது வரை 3 வரிசையில் அனுப்பப்பட்ட பக்தர்கள், 5 வரிசையில் அனுமதிக்கப்பட்டாங்க.
சாம்பிராணியை தைலம் போல காய்ச்சி அத்திவரதருக்குப் பூசி, நீல நிற பட்டாடையில் துளசி பட்டாடையுடன் அவர் காட்சியளித்தார். இந்தப் பந்தல், பட்டாடை, மற்ற அலங்காரங்கள் எல்லாமே சசிகலா செலவு தானாம். அத்திவரதருக்கு செய்த சிறப்பு அலங்காரம் மூலம் தனக்கு அனுக்கிரகம் கிடைத்து சீக்கிரம் ரிலீஸ் ஆயிடலாம்னு சசி நினைக்கிறாராம்.
சசிகலா தரப்புக்கு அதிமுக தரப்பில் இருந்து எந்த ஒரு எதிர்ப்பும் இல்லையாம். சசிகலாவிற்கு தரிசனம் கிடைத்ததா இல்லையா என்று டிசம்பர் மாதம் வரை பொறுத்து இருந்து பார்க்கலாம் என்று அரசியல் வட்டார பட்சிகள் கூவுகின்றன














