தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டாக்டர்.செந்தில் குமார் நாடாளுமன்ற கூட்ட தொடரில் தூங்கியது போன்ற போட்டோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்த விஷயத்தை அறிந்த செந்தில்குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் விவாதத்தின் போது நடைபெற்ற வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். மேலும் சமூக வலைத்தளங்களில் தன் மீது அவதூறு பரப்புவதற்காக பொய்யாக ஒரு படத்தை பதிவிட்டு பரப்பி வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.















