நீட் தேர்வு மூலம் ஒடுக்கப்பட்ட ஏழை, கிராமப்புற மாணவர்கள் மருத்துவ கனவு கருகுவதாக தமிழ்நாட்டில் எதிர்ப்பு கிளம்புகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு நீதிபதி ஏகே ராஜன் தலைமையில், 8 உறுப்பினர்களை கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளது.
இக்குழுவுக்கு neetimpact2021@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நீட் தொடர்பான உங்கள் கருத்துகளை 5பக்கங்களுக்கு மிகாமல் எழுதி அனுப்பலாம். அத்துடன் மருத்துவக் கல்வி இயக்ககம் முன்பு வைத்திருக்கும் தபால் பெட்டியில் கருத்துகளை தாளில் எழுதியும் போடலாம். வரும் 23ஆம் தேதி வரை இதற்கான அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.














