பட்டாக்கத்தியால் கேக் வெட்டியவர் நண்பர்களுடன் கைது

0
1220

கடந்த ஓரிரு ஆண்டுகளாக பிறந்தநாளில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டுவதை ஒரு பேஷன் ஆகவே ஆக்கிவிட்டனர்.

சென்னை கண்ணகி நகர் இரண்டு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் சுனில் என்பவருடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பட்டாக்கத்தியால் கேக் வெட்டி குழுவினராக கொண்டாடியதாக சமூக வலைதளங்களில் வெளிவந்த வீடியோ மூலம் கிடைத்த தகவலின் பேரில் கண்ணகி நகர் காவல் துறையினர் பட்டாக் கத்தியை கொண்டு கேக் வெட்டிய சுனில், நவீன்குமார் (எ) தொப்பை, அப்பு, தினேஷ், ராஜேஷ், கார்த்திக் (எ) பீடி ஆகியோர் 6 பேரை இன்று காவல்துறையினர் கைது செய்தனர் மேலும் விசாரணைக்குப் பின் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட உள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here