மதுரை மாவட்டத்தில் கொரோனாட பணிகளில் தொய்வு ஏற்படுவதாக கூறி ஆட்சியர் அனீஸ் சேகரிடம் புகார் மனு அளித்துவிட்டு, செய்தியாளர்கள் சந்திப்பில் , ‘தமிழக அரசு இன்னும் முழுவீச்சில் கொரோனா பணிகளில் ஈடுபடவேண்டும். தடுப்பு ஊசிகள் போட பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். பரிசோதனைகள் அதிகப்படுத்த வேண்டும். காய்கறிகள், பலசரக்கு உள்ளிட்டவைகள் வண்டிகளில் தடையின்றி கிடைக்க ஏற்பாடுகள் செய்யவேண்டும்’ என அதிமுக சார்பில் தெரிவித்த முன்னாள் அமைச்சரகள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.வி. ராஜன் செல்லப்பா, பெரியபுள்ளான், ஐயப்பன் ஆகியோர் கூறினர்.
கட்சி நிர்வாகிகள் எம்.எஸ். பாண்டியன், ராஜா, வக்கள் ரமேஸ், நிலையூர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.














