நாங்குநேரி தொகுதியில் வெளியூர் வேட்பாளரை நிறுத்தியுள்ளது நிறைய விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. உள்ளூர் காங்கிரஸ்காரர்கள் கேட்ட அந்த கேள்வியை எதிர்கட்சியினரும் கேட்க தொடங்கிவிட்டனர்.
நாங்குநேரி தொகுதி தேர்தல் பணிக்காக வந்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திருச்செந்தூர் முருகன் கோயிலில் வழிபாடு செய்தார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், ‘ நாங்குநேரி காங்கிரசின் கோட்டை என்றால், வெளியூர் வேட்பாளரை ஏன் நிறுத்தவேண்டும்?’ எனக்கேட்டார்.














