மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, கட்டைக்கால், நாதஸ்வரம், மேளம் உள்ளிட்ட கலைகளில் தேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.

கடந்த வருடம் கரோன தொற்று ஆரம்பித்தது முதல் இவர்களுக்கான வேலை வாய்ப்பு இல்லாமல் போய், வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. அதேபோல் தற்போது கரோன தொற்று இரண்டாவது நிலை ஏற்பட்டுள்ளதால் மிகவும் பாதிக்கப்பட்டு வறுமை நிலையில் உள்ளனர் .

இந் நிலையில் , இன்று இவர்கள் கரோவை ஒழிப்போம் .
சமூக இடைவெளியுடன் இருப்போம் என்ற உறுதி மொழியுடன், தங்களுக்கு மாதாந்தர உதவித்தொகை வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.














