விழுப்புரம் அருகே உள்ள கானைக் குப்பம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது இங்கு கானை, பெரும்பாக்கம்,மாம்பழப்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
விவசாயிகள் கொண்டுவரும் செல் மூட்டைகளை பெற்று வியாபாரிகள் எடுத்து செல்வதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது ஆனால் வியாபாரிகள்கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை எடுத்து செல்லாததாலும்,விவசாயிகள் கொண்டுவந்த நெல் மூட்டைகளை வாங்காததாலும் அங்கேயே தேங்கி கிடக்கிறது.

கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நெல்மணிகள் முளைத்துள்ளன இதனால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்
அரசு உடனடியாக விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர் இதுதொடர்பாக கூட்டுறவ பண்டகசாலை அலுவலரிடம் பேசியபோது விரைவில் நெல் மூட்டைகள் கொள் முதல் செய்யப்படும் என்று கூறியுள்ளார்













