கோவை நல்லாம்பாளையம் பாலாஜி நகர் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் வேணுகோபால்( 35) .இவர் நேற்று முன்தினம் மாலை நல்லாம்பாளையம் சாலையில உள்ள டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்
. அப்போது வேணுகோபாலன் பழைய நண்பர் சுதாகர் என்பவர் அங்கு சென்று கொண்டே இருந்தார். இதைப்பார்த்த வேணுகோபால் சத்தமாக சுதாகரை அழைத்ததாக கூறப்படுகிறது .இதை சுதாகர் விரும்பவில்லை
. ஏன் பொது இடத்தில் சத்தம்போட்டு கூப்பிடுகிராய் என கூறி சுதாகர் வேணுகோபாலை திட்டியுளளார். இதையடுத்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்பகுதியில் உள்ளவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர் .
இதில் ஆத்திரமடைந்த சுதாகர் தனது நண்பர்கள் கோபாலன் மற்றும் கோபிநாத் இடம் இதுகுறித்து கூறினர். உடனே கோபாலன் மற்றும் கோபிநாத் சிறிது நேரம் கழித்து சம்பவ இடத்திற்கு மீண்டும் வந்து அங்கு இருந்த வேணுகோபாலை அழைத்து சத்தம் போட்டதோடு கத்தியால் குத்தி உள்ளனர் .மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர்.
இதில் காயமடைந்த வேணுகோபால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து வேணுகோபால் துடியலூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார் .புகாரின் பேரில் போலீஸார் கோபாலன் மற்றும் துடியலூர் சுப்பிரமணியம் பாளையம் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் கோழி என்கிற கோபிநாத் (21) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.