சுகாதார துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று கூறுகையில், தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாத சாதாரண சிகிச்சைக்கு தினமும் ரூ. 5 ஆயிரம், ஆக்சிஜனுடன் கூசிய சிகிசைக்கு ரூ.15 ஆயிரம், தீவிர சிகிச்சைக்கு ரூ. 35 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கொரோனா இலவச சிகிச்சைக்கு 890 மருத்துவமனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அங்கு சிகிச்சை பெறுவோருக்கான காப்பீட்டு தொகை மூலம் கட்டணம் வழங்கப்படும். அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா கட்டணப் பட்டியல் வைக்கவேண்டும்.” என்றார்.