18 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது.
கூடுதல் ஆக்சிஜனை பிற மாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலம் தமிழகம் கொண்டு வரவும் தீர்மானித்துள்ளது.
மத்திய அரசு ஒதுக்கியுள்ள தடுப்பூசி போதிய அளவில் இல்லாததால், வெளிநாடுகளில் இருந்து கொண்டு வர முடிவு செய்துள்ளது.
அதற்காக,இறக்குமதிக்கு சர்வதேச டெண்டர் விட முடிவெடுத்துள்ளது.














