கொரோனா ஊரடங்கு சூழல் காரணமாக டிஎன்பிஎஸ்சி நடத்தவிருந்த குரூப் 1 தேர்வை ரத்து ஒத்திவைத்துள்ளது. இம்மாதம் 28,29, 30ஆம் தேதிகளில் நடக்கவிருந்த முதன்மை தேர்வுகள் காலவரையறை குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.
அதுமட்டுமின்றி, ஜூன் 5ஆம் தேதி நடக்கவிருந்த இந்திய ராணுவக் கல்லூரியில் சேர்வதற்கான ராஷ்டிரிய தேர்வையும் தள்ளிவைத்துள்ளனர். ஜூன் 6ல் நடக்கவிருந்த ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிக்கான தேர்வும் ஒத்திவைக்கப் பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.















