மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்கை தாமாக முன்வந்து விசாரித்ததும் சாத்தான்குளம் தந்தை-மகன் கொட்டடி கொலை வழக்கில் பல திருப்பங்கள் நிகழ்ந்துள்ளன
நியாயத்துக்கு புறம்பாக தகுதி சான்று அளித்த டாக்டர் வெண்ணிலா கூடுதலாக 15 நாட்கள் விடுப்புக்கு விண்ணப்பித்துள்ளார். ஏடிஎஸ்பி ,டிஎஸ்பி, மற்றும் காவலர் மகாராஜன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இபிகோ 302 ஆவது பிரிவை பயன்படுத்தும் அளவுக்கு வீடியோ ஆதாரம் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது .
இந்நிலையில் தூத்துக்குடி எஸ் பி அருண் கோபாலன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார் அவருக்கு பதிலாக விழுப்புரம் எஸ்பி ஜெயகுமார் தூத்துக்குடிக்கு பணியமர்த்தப்பட்டுள்ளார்.











