மாநகராட்சி ஆணையருடன் மக்கள் வாக்குவாதம்

0
1091

தமிழகத்தில் கோரோனா ஊரடங்கு நாளை முதல் தளர்வுகள் இன்றி அமல் படுத்தப்பட உள்ள நிலையில் இன்று ஒரு நாள் மட்டுமே அனைத்து வகை கடைகளும் திறந்திருக்கும் என அரசு அறிவித்திருந்தது.

இதனால் வேலூர் மாநகர் பகுதிகளில் மாங்காய் மண்டி பகுதி, வெங்கஷ்வரா பள்ளி மைதானம், ஊரிசு பள்ளி மைதானம், ஹோலிகிராஸ் பள்ளி மைதானம், காட்பாடி டான்பஸ்கோ பள்ளி மைதானம் ஆகிய பகுதிகளில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மொத்த மற்றும் சில்லரை வியாபார காய்கறி கடைகளில் பொருட்களை வாங்க மக்கள் சமூக இடைவெளி, நோய்தடுப்பு நடவடிக்கைகளை மறந்து சுயகட்டுப்பாட்டை மீறி அதிக அளவு குவிந்ததால் கரோனா தொற்று பரவும் சூழல் உண்டானது.
மேலும் காய்கறிகள் விலையும் கடுமையாக உயர்ந்ததால் மக்கள் அவதியடைந்தனர்.

இந்நிலையில், முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு சுகாதாரத்துறையினர் கரோனா பரிசோதனை செய்தனர். காவல்துறையினர் போக்குவரத்தை சரிசெய்ய திணறினார்கள். காட்பாடி டான்பஸ்கோ பள்ளி மைதானத்தில் சமூக இடைவெளியை மறந்து மக்கள் கூடியதால் அங்கு வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பொது மக்களுக்கு போதிய வழிகாட்டு நெறிமுறை வழங்கவில்லை. கடைகள்,வியாபாரத்தை முறை ப்படுத்தவில்லை என்று கூறி பொது மக்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினர் இவர்களை தடுத்து அனுப்பிவைத்தனர்.

இதோ கீழே அதற்கான காணொளி (வீடியோ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here