உலகின் அதிக உயரமான எவரெஸ்ட் கொஞ்சம் தாழ்ந்துவிட்டதோ என்ற சந்தேகம் வந்துவிட்டதால் அதை மறு அளவீடு செய்யப்போகின்றனர்.
கடந்த 1954ல் எவரெஸ்டை அளந்து 8,848 மீட்டர் என அறிவித்தார்கள். அதுமுதல் உலமின் உயர்ந்த சிகரமாக இருந்துவந்தாலும், 2012ல் நேபாளத்தி லேற்பட்ட பெரும் பூகம்பத்தில் எவரெஸ்ட் உச்சி நிலைகுலைந்துவிட்டதாக உணரப்பட்டது. இதையடுத்து சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள மறு அளவீடு செய்ய சீனாவும் நேபாளமும் ஒப்பந்தம் செய்து வேலையை தொடங்கப்போகிறார்கள்.










