தமிழ்நாட்டில் சமீபத்தில் 2345 செவிலியர் பணியிடங்களுக்கு தேர்வு நடந்தது. பின்னர் தற்காலிக தேவை கருதி 2,580 பேர் நியமனம் செய்யப்பட்டனர்.
இதில், குறைந்த மதிப்பெண் பெற்ற 56 பேர் பணி நியமனம் செய்யப்பட்டதாக திவ்யபாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணை முடிவில், செவிலியர் பணி நியமனத்துக்கு தடை விதித்தும், வரும் 14ஆம் தேதிக்குள் மனுவுக்கு பதிலளிக்கவும் மருத்துவ பணிகள் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிடப்பட்டது













