லலிதா ஜூவல்லர்ஸ் நகை கொள்ளை தொடர்பாக தேடப்பட்ட சுரேஷ் கைது செய்யப்பட்டான். விசாரணைக்காக திருவாரூரிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட சுரேஷின் தாயார் கனகவல்லியையும் போலீசார் கைது செய்தனர்.
கொள்ளை சம்பவத்துக்கு மூளையாக இருந்த முருகனின் தம்பி சுரேஷ், முருகன் தயாரித்த ஒரு தெலுங்கு படத்திலும் நடித்துள்ளான். வங்கி ஏடிஎம் கொள்ளை, லலிதா ஜுவல்லரி திருட்டுகளில் முருகனுடன் ஈடுபட்டுள்ளான்.














