108 என்றாலே அவசரமாக நம்மை காப்பாற்றும் வாகனம் என்ற நம்பிக்கை உண்டு. ஆனால், கொடைக்கானலில் இந்த 108ஆல் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அங்கு பூண்டியை சேர்ந்த நவநீதன் என்பவர் விஷம் அருந்திய நிலையில் 108 ஆம்பிலன்ஸ் மூலம் தேனி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். நடுவழியில் டயர் வெடித்து ஆம்புலன்ஸ் நின்றது. அதை சரி செய்ய முயன்று முடியாமல், வேறு வாகனத்தை வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்ப 2 மணி நேரம் ஆகிவிட்டது. அதற்குள் நவநீதன் இறந்துவிட்டார்.













