கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர்கள் தலையில் பாரமேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கல்வியாளர்கள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், தற்போது விடுமுறையில் கலாச்சார வகுப்பு நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். ஓய்வு பெற்ற தமிழாசிரியர்கள் மூலம் இந்த வகுப்பு நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், சிறுவர்களுக்கு கிடைக்கும் சிறிது ஓய்வையும் இது பறிப்பதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பள்ளி நாட்களில் முன்பு நடத்திய நல்லொழுக்க போதனை வகுப்பு போல் ஏதாவது நடத்தலாம். அல்லது, தகுந்த மனநல வகுப்பு எடுக்கலாம் என்பது அவர்கள் கருத்து. படிப்பு என்பது மூளை வேலை என்பதல ஓய்வு அவசியம் என்பது அவர்கள் கருத்து. கலாச்சார வகுப்பில் தேர்வு இலை என்றாலும், மூளை வேலையை விட்டு சிறிது உடல், மன ஓய்வு அவசியம் என்பது அவர்கள் கருத்து.














