காஷ்மீரின் மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த இரு மாதங்களாக அங்குள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது இதனால் கடுமையான விமர்சனங்கள் எழுவது சிறையில் இருக்கும் தலைவர்களை விடுவிக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது அதன்படி வெளியில் சென்று அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம் கூட்டங்கள் நடத்த மாட்டோம் என்று எழுதிக் கொடுத்தாள் வீட்டில் இருந்து வெளியில் செல்ல அனுமதிப்பதாக காவல் அதிகாரிகள் கூறியுள்ளனர் அதன்படி கூரியத் தலைவர் மிர்வாஸ் உமர்பாரூக், 3 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மக்கள் மாநாட்டு தலைவர் ஒருவர் ஆகிய 5 பேர் நிபந்தனையை ஏற்று விடுதலையாக முன் வந்தனர். அவர்களிடம் பிணை பத்திரம் எழுதி வாங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.