சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கனரா வங்கிக்குள் நேற்று புகுந்த கும்பல், அங்கு இருந்த காவலாளி தங்கமணியை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்றனர்.
இதை தடுக்கும் வகையில் காவலாளி தங்கமணி சுட்டதில் தமிழ்செல்வம் என்பவர் படுகாயமடைந்தார்.
அமமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் சரவணன் கொலைக்கு பழிக்குப்பழி வாங்க நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.











