மதுரை எல்லீஸ் நகர் ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், உள்ள வீட்டில் விபச்சாரத் தொழில் நடைபெறுவதாக ரோந்து பணியில் ஈடுபட்ட மதுரை எஸ்எஸ் காலனி காவல் நிலைய சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளர் பிளவர்ஷீலா-க்கு கிடைத்த ரகசிய இதனைத் தொடர்ந்து, எஸ் எஸ் காலனி சட்டம் ஒழுங்கு தனிப்படை காவலர்கள் ரகசியமாக அந்த வீட்டை கண்காணித்து வந்தனர்.
அதனைத் தொடர்ந்து ஆள்கடத்தல் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் உதவியுடன், குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டிற்கு வாடிக்கையாளர் போன்று சோதனையில் ஈடுபட்ட போலீசார் அங்கிருந்த ராணி, ரைமான்பீவி, ராமசாமி, ரமேஷ், நிசாந்த் ஆகிய 5 பேர் கொண்ட கும்பலை சம்பவ இடத்திலேயே கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து அந்த கும்பலை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பெற்றோர்களிடம் சண்டையிட்டு வெளியூருக்கு வேலை தேடி வந்து, கடந்த சில மாதங்களாக இந்த கும்பலிடம் ஜோதி (வயது 20) என்ற பெண் சிக்கி இருந்ததது தெரியவர, பாதிக்கப்பட்டிருந்த ஜோதியை போலீசார் மீட்டனர். இளம் வயதிலேயே வீட்டை விட்டு வெளியில் வரும் இளம் பெண்களை குறிவைத்து இதுபோன்ற தவறான நபர்களுடன் பழகுவதால் ஏற்படும் பாதிப்பை உணர வேண்டும் எனவும், போலீசார் ஜோதிக்கு அறிவுரை வழங்கினர்.