பத்திரிகையாளர் என்றாலே பதறும் நடிகர் ரஜினிகாந்த், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலை சொல்வதில்லை.
அவ்வாறே நேற்று அவரை விரட்டிப்பிடித்த நிருபர்கள் அமித்ஷாவின் இந்தி தின பேச்சு பற்றி கேட்டதற்கு, ‘ நாட்டுக்கு ஒரு பொது மொழி இருந்தால் முன்னேற்றம் இருக்கும். துரதிருஷ்டவசமாக இங்கு அப்படி ஒரு மொழி இருக்க வாய்ப்பில்லை.
இந்தி பொதுமொழியானால் தமிழ்நாட்டவர்கள் மட்டுமல்ல, தென்மாநில மக்களும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள், வட இந்தியாவில் பல மாநிலத்தவர்களும் எதிர்ப்பார்கள்’ என்று பிறர் எண்ணத்தை கூறி, தன் கருத்தை கூறாமலே தப்பிச்சென்றார்.















