உடலில் மதுபாட்டில்களை மறைத்து கடத்திய இளைஞர்கள் கைது

0
515

திருவாரூர் மாவட்டத்தில் கொரானா பெருந்தொற்று பரவாமல் தடுக்க முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் டாஸ்மாக் மதுபான கடைகள் அடைக்கப்பட்டன திருவாரூர் மாவட்டத்தில் மது கிடைக்கவில்லை என்றாலும் அருகில் உள்ள காரைக்காலில் மதுபான கடைகள் திறக்கப்பட்டன பாண்டிச்சேரி மாநிலமான காரைக்காலில் மதுபாட்டில்கள் விலை குறைவும் கூட.

அங்கிருந்து மதுபாட்டில்கள் கடத்திவரப்ப்பட்டு திருத்துறைப்பூண்டி பகுதிகளில் கள்ள சந்தையில் விற்கபடுவதாக வந்த தகவலின் பேரில் மதுவிலக்கு போலீசார் பல பகுதிகளில் சோதனையில் ஈடுப்பட்டனர் அப்போது திருத்துறைப்பூண்டி அருகே கச்சனம் என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது இரு இளைஞர்கள் சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர் அவர்களை மறித்து சோதனையிட்ட போது நூதன முறையில் அவர்கள் உடலில் பார்சலில் ஓ ட்டப்படும் டேப் மூலம் உடலில் 48 மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது

அந்தக் இரு இளைஞர்கள் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள களப்பால் பகுதியை சேர்ந்த ரமேஷ் மற்றும் மனோகர் என தெரியவந்தது அவர்களிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து மதுவிலக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் திருத்துறைப்பூண்டி பகுதியில் கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்கப்படுகின்றனவா என தீவீர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here