சென்னையில் திருமண விழாவுக்காக அதிமுக பிரமுகர் ஜெயகோபால் வைத்த அனுமதியற்ற பேனர் விழுந்து இளம்பொறியாளர் சுபஸ்ரீ மடிந்தார்.
பேனர் அச்சடித்தவர், மோதிய லாரி ஓட்டுநர் என எஎல்லோரையும் கைது செய்த நிலையில், ஜெயகோபாலை வழக்கில் சேர்க்கக்கூட போலீசார் தயங்கினர். அவரும் தன் மீதான குற்றச்சாட்டை தெனாவட்டாக மறுத்து பேட்டியும் அளித்தார்.
இந்நிலையில், வழக்கின் முக்கிய நபரான அவரை கைது செய்யவேண்டும் என கோரிக்கை வலுத்ததால் வேறு வழியின்றி போலீசார் அசைந்துகொடுக்க ஆரம்பித்தனர். இதனால் வழக்கம்போல் அவருக்கு நெஞ்சு வலி வந்தது. தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.













