உலகெங்கிலும் உள்ள துப்பறியும் நபர்களுக்கும் நோயியல் நிபுணர்களுக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தக்கூடிய வகையில், இறந்து ஒரு வருடத்திற்கும் மேலாக மனித உடல்கள் கணிசமாக அசையும் என்பதை ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஒருவர் நிரூபித்துள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த அலிசன் வில்சன் மற்றும் அவரது குழுவினர் 17 மாதங்களுக்கும் மேலாக ஒரு சடலத்தின் அசைவுகளை தொடர்ந்து டைம்-லேப்ஸ் புகைப்பட தொழில்நுட்ப கருவியை பயன்படுத்தி ஆய்வு செய்தனர். இந்த செயல்பாட்டில் மனித உடல்கள் உண்மையில் கணிசமாக அசையும் என்பதைக் கண்டறிந்து உள்ளனர்.
கேம்ஸ்பரில் உள்ள சடல பாதுகாப்பு பண்ணையில் ஆய்வு நடைபெற்ற ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் சமீபத்தில் ‘சினெர்ஜி‘ பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து வில்சன் கூறியதாவது:
நான் ஒரு குழந்தையின் மரணத்தில் ஈர்க்கப்பட்டேன், மரணத்திற்குப் பிறகு உடல் எவ்வாறு சிதைகிறது என்பதில் எப்போதும் ஆர்வமாக இருந்தேன்.
இந்த அசைவை பற்றி நன்கு புரிந்துகொள்வது மற்றும் சிதைவு விகிதம் ஆகியவை மரண நேரத்தை இன்னும் துல்லியமாக மதிப்பிடுவதற்கு காவல்துறையினரால் பயன்படுத்தப்படலாம்.















