மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம் ,பெரிய இலந்தை குளத்திற்கு மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து, பெரிய இலந்தை குளம் கிராமத்திற்கு, கடந்த 40 ஆண்டுகளாக வந்துகொண்டிருந்தது அரசு பஸ்சை, தற்போது பெரிய இலந்தைகுளம் அருகே கொண்டையம்பட்டி அரசு பள்ளிக்கு ஆளில்லாமல் செல்வதால், பெரிய இலந்தைகுளம் கிராமம் மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் எங்களுக்கு வரவேண்டிய பஸ்சை வேறு பக்கம் திருப்பக் கூடாது என்று கூறி, பஸ் மறியலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற பஸ் மறியலில், அலங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்
சக்தி கண்ணன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பஸ் மறி யலை கைவிட்டனர்.