சீன, இந்திய நல்லுறவு குறித்து கடந்த ஆண்டு சீன அதிபரும் இந்திய பிரதமரும் சீனாவில் சந்தித்தனர். அதன் தொடர்ச்சியாக இரண்டாவது சந்திப்பை இந்தியாவில் நடத்த தீர்மானித்தனர்.
இந்த சந்திப்பு வரும் அக்டோபர் 11 முதல் 13ஆம்தேதி வரை சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது. சந்திப்பினிடையே மாமல்லபுரம் தொடர்பான வரலாற்று, கலை சின்னங்களை இருவரும் பார்வையிடுவர்.
இதற்கான ஏற்பாடுகளை செய்ய சீன அதிகாரிகள் மாமல்லபுரம் வந்து சென்றுள்ளனர்.