பாகிஸ்தான் லாகூர் நங்கனா சாகிப் பகுதியில் உள்ள சீக்கிய குருத்வாரா தலைவரின் 19 வயது மகளை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கடத்திச் சென்று துப்பாக்கி முனையில் மிரட்டி இஸ்லாம் மதத்திற்கு மாற்றியதாகவும், பின்னர் இஸ்லாமியர் ஒருவருக்கு அவரை திருமணம் செய்து வைத்தாகவும் தகவல் வெளியானது.
பெண்ணின் பெற்றோர் இம்ரான் கான், பாகிஸ்தான் ராணுவ தளபதி உதவி செய்ய கோரிக்கை விடுத்தனர். சீக்கிய பெண் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். அந்த விவகாரம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதற்ற நடந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கூடிய சீக்கியர்கள் ஊர்வலமாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து சமாதானப்படுத்தினர். ஆனாலும், ஏராளமானோர் தடுப்புகளை தாண்டி நாடாளுமன்ற வளாகம் நோக்கி சென்றனர். அவர்களை போலீசார் கைதுசெய்தனர்.