திருச்சி மலைக்கோட்டையில் உச்சியில் உச்சிப்பிள்ளையாரும், அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும் உள்ளனர். அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு தங்க காவசம் அணிவிக்கப்பட்டது. மாணிக்க விநாயகருக்கு கனிகளாலும், உச்சிப்பிள்ளையாருக்கு மலர்களாலும் அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பின்னர் அடிவாரத்திலிருந்து 150 கிலோ எடையுள்ள கொழுக்கட்டை தொட்டில் கட்டி உச்சிப்பிள்ளையாருக்கு படைக்க கொண்டுவரப்பட்டது.













