நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் ஊர்வலம் பலத்த போலீஸ் காவலுடன் தொடங்கியது.
கடந்தாண்டு நடந்த விநாயகர் ஊர்வலத்தின்போது இரு தரப்பினருக்கிடையே கலவரம் மூண்டது. இதனால் இந்தாண்டு பலத்த போலீஸ் காவலுடன் ஊர்வலம் சற்று நேரத்துக்கு முன்பு தொடங்கியது.
இதையொட்டி செங்கோட்டை, தென்காசி, கடையம் பகுதியில் 19 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. பிற்பகலில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.













