அமெரிக்க கடற்பரப்பில் மையம் கொண்டுள்ள டொரியன் புயல் கரையை நோக்கி வேகமாக நகர்கிறது. 295 கி.மீ. வேகத்தில் நகரும் இந்த புயல், கரையேறும்போது 350 கி.மீ. வேகம் வரை வலுப்பெறும்.
டொரியன் தாக்குதலை எதிர்கொள்ள புளோரிடா தயாராக உள்ளது. மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. ஜார்ஜியா, கரோலினா பகுதிகளிலும் மக்கள் சில இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
டிரம்ப் தனது வெளிநாடு பயணத்தை ரத்து செய்துள்ளார். இன்னும் சிறிது நேரத்தில் 10 மணியளவில் புயல் கரையை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.















