தலைவர் பதவி தராவிட்டால் வேறுவிதமான முடிவெடுக்க நேரிடும் என மத்திய பிரதேச காங்கிரஸ் பிரமுகர் ஜோதிராதித்ய சிந்தியா தலைமைக்கு மிரட்டல் விடுத்துள்ளார். கமல்நாத் முதல்வரானதால் தனக்கு மாநில தலைவர் பொறுப்பு கிடைக்கும் என நினைத்தார். கிடைக்கவில்லை. துணை முதல்வராகவும் ஆக்கவில்லை என்பதால் அதிருப்தி அடைந்தார்.
இறுதியாக இப்படி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் கமல்நாத் ஆடிப்போனார். அவசரமாக சோனியா காந்தியை சந்தித்துள்ளார்.













