வேலையில் இருந்து நீக்கிய முதலாளியை தாக்கியவர் மீது வழக்கு

0
1022



உக்கடம் பகுதியைச் சேர்ந்த அஜிமுதீன் என்பவரின் மகன் நூருல் அக்பர் (20 ).இவரது கடையில் சாகத் என்பவர் பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாகத் கடையில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டது குறித்து நேற்று மாலை நூருல் அக்பரிடம் கேட்டுள்ளார். இதை அடுத்து ஏற்பட்ட தகராறில் நூருல் அக்பரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here