ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடைபெற்று தற்போது அங்கே சைட் மியூசியம் அமைக்கப்பட்டது. இந்த சைட் மியூசியத்தை அந்த பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் கண்டு களித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று அங்கு சுற்றுலாவுக்காக வந்த கல்லூரி மாணவிகள் அங்கு கீழே கிடந்த தங்க மோதிரத்தை மீட்டு அங்குள்ள அதிகாரிகளிடம் கொடுத்தனர். இது அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டதா? அல்லது கீழே கிடந்ததா? என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.












