ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் பகுதியில் அமெரிக்கப் படைகள் மேற்கொண்ட தாக்குதலில் ஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா லேடன் கொல்லப்பட்ட செய்தியை வெள்ளை மாளிகை உறுதி செய்தது.
இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், கொல்லப்பட்ட அல் கொய்தா பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா பின்லேடன் அமெரிக்க பயங்கரவாத தடுப்புத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இது பாகிஸ்தான் – ஆப்கான் பகுதியில் நிகழ்ந்தது. ஹம்சா பின்லேடனின் மரணம் அல்கொய்தாஅமைப்புக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.












