தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சாலைப்புதூரில் மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் முதல் பரிசை சிவலூர் அணி தட்டி சென்றது. போட்டிக்கான முதல் பரிசு மற்றும் வெற்றி கோப்பையை தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் சார்பில் கட்சி நிர்வாகிகள் வழங்கினர். இதில் பல்வேறு அணிகள் கலந்து கொண்டு விளையாடியது.