கர்நாடகாவில் ஊடகங்கள் இறுதியாக கணித்தபடியே காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது அங்கு இறுதியாக கிடைத்த தகவலின்படி 224 தொகுதிகளில் காங்கிரஸ் 129 இடங்களையும், பாஜக 66 இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 22 இடங்களையும் கைப்பற்றின.
மதச்சார்பற்ற ஜனதா தள உறுப்பினர்களையும், சுயேச்சைகளையும் இணைத்து ஆட்சியை புடிக்கலாம் என்று கருதிய பாஜகவின் முடிவு கட்டுடைக்கப்பட்டது
அனைத்து காங்கிரஸ் உறுப்பினர்களையும் பெங்களூருக்கு வருமாறு மாநில தலைவர் டி கே சிவகுமார் உத்தரவிட்டார். பெரும்பான்மை வெற்றி என்ற தேர்தல் முடிவுக்கு அவர் ஆனந்தக் கண்ணீர் விட்டார்.














