தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் உள்ள கடற்கரையில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். இந்த நிலையில் அந்த கடல் பகுதியில் தற்போது ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கி பக்தர்களை தாக்கி வருகிறது. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.










