ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவராம மங்கலத்தைச் சேர்ந்த வேதநாயகம் மகன் செல்லையா (60). இவர் நீண்ட காலமாக சாத்தான்குளம் வீரக்குமார பிள்ளை தெருவில் வசித்து வந்தார்.
.இவரது மனைவி சரோஜா கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகன் துரை திருமணம் ஆகி கோவையில் இருந்தார் தற்போது ஊருக்கு வந்துள்ளார்
செல்லையா. உடல் நலக்குறைவு காரணமாக நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று ஊர் திரும்பினார் வழக்கம்போல் கரையடி சுடலை மாடசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோயில் அருகே படுத்து உறங்கினார்.
இந்நிலையில் இன்று காலை செல்லையா கழுத்து அறுபட்ட நிலையில் இறந்து கிடப்பதாக சாத்தான்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன்பேரில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஏசு ராஜசேகரன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் நாகராஜன், ஸ்டீபன் சுரேஷ்குமார் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடம் இருந்து சென்று அவரது உடலைகைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்
போலீசார் விசாரணையில், ஊருக்கு வந்திருந்த செல்லையாவின் மகன் துரை, தந்தையிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும், அதனால் அவர் மகனையும் தனது மனைவியையும் திட்டியதாகவும், அதனால் ஆத்திரமடைந்து கையில் இருந்த கத்தியால் தந்தையின் கழுத்தை அறுத்துக் கொன்றதாகவும் தெரியவந்தது.
இதை எடுத்து போலீசார் துரையை கைது செய்தனர்.