திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ல் நேற்று இரவு நியூஸ் 7 செய்தியாளர் நேச பிரபு, குண்டர்களால் பயங்கரமாக தாக்கப்பட்டார்.
இத்தாக்குதலை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பத்திரிக்கையாளர் மன்றம் மற்றும் அனைத்துக் கட்சி, பொதுநல அமைப்புகள் சார்பில் சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பத்திரிகையாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும், கொலைவெறி தாக்குதல் நடத்திய குண்டர்கள் மீது கடும் நடவடிக்கை பாய வேண்டும் என கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது கோஷமிட்டனர்.
காங்கிரஸ் நகர செயலாளர் வேணுகோபால், ஒன்றிய பாஜக தலைவர் சரவணன், வியாபாரிகள் சங்க செயலாளர் மதுரம் செல்வராஜ், தலைவர் அப்பு கண்ணன், மாவட்ட பாஜக ஆன்மீக பிரிவு செயலாளர் ராஜபாண்டியன், மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்க மாநில அமைப்பாளர் இசக்கிமுத்து, மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சக்திவேல் முருகன், மாவட்ட திமுக பிரதிநிதி அலெக்ஸ் பிரிட்டோ உள்ளிட்ட பலர் தாக்குதல் சம்பவம் குறித்து பேசினர்.
நிகழ்வில் காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் சங்கர், வடக்கு வட்டார தலைவர் பார்த்தசாரதி, பேரூராட்சி கவுன்சிலர் லிங்கபாண்டி, பாஜக ஒன்றிய பொது செயலாளர் ராஜேஷ், முன்னாள் நகரத் தலைவர் ஜோசப், உள்ளாட்சி பிரிவு ஒன்றிய தலைவர் மணிகண்டன், ஒன்றிய சுற்றுச்சூழல் பிரிவு செயலாளர் ஜெய சுந்தரராஜ், டி.யு.ஜே மாநில செயலாளர் நிக்சன், அதிமுக ஒன்றிய துணை செயலாளர் சின்னதுரை, முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் பாபு சுல்தான், விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் ஜெயராமன், செந்தில் மற்றும் சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம் பத்திரிகையாளர்கள் பங்கேற்றனர்.