மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா ,
ராஜீவ் காந்தி நகர் முருகேசன் மகன் ராஜ்குமார் ( 29) மதுரை மாநகர் காவல் துறையில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று நள்ளிரவு 2 மணியளவில் வீட்டின் வாசலில் திடீரென வெளிச்சமாக தெரிந்ததையடுத்து. வீட்டின் கதவை திறந்து பார்த்த போது ,வாசலில் இருந்த பைக் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது.
உடனே, அருகில் இருந்தவர்கள் உதவியுடன் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
இதுகுறித்து, திருப்பரங்குன்றம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு ஆய்வாளர் சுந்தரி வந்து விசாரணை செய்தார் .
.













