மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில் இன்று காலை மாதாந்தர கூட்டம் நடந்தது.
இதில், கலந்து கொண்ட அனைத்து கட்சி வார்டு கவுன்சிலர் களுக்கும் அன்பளிப்பு வழங்கப்பட்டது.
ஆனால்,அதிமுக கவுன்சிலர்கள், அன்பளிப்பு எங்களுக்கு வேண்டாம், மக்கள் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று கூறி மறுத்துவிட்டனர்.
இதனால் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் சிறிது முகம் வாடினாலும், பின்னர் அதிமுக கவுன்சிலர்களின் கோரிக்கைகளை செவிமடுத்துக் கேட்டு, அவை நிறைவேற்றித் தரப்படும் என்று கூறினார்.














