இளம்பெண்ணை பலாத்காரம் செய்த இருவருக்கு 20 ஆண்டு சிறை

0
395



கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடுகபாளையம் பகுதியில் கணவரை பிரிந்த 28 வயதான பெண் வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில், கடந்த 2016 ம் ஆண்டு, அந்த பெண்ணை, கணவருடன் சேர்த்து வைப்பதாக கூறி, அவரது குடும்ப நண்பர்களான விமல்ராஜ், கார்த்திக் ஆகியோர் ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது, வடுகபாளையம் வழியில் செல்லும் புத்து மாரியம்மன் கோவில் அருகே புதரில் அந்த பெண்ணை தாக்கி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணையில் அரசு சார்பில் வழக்கறிஞர் ஜிஷா ஆஜராகினார்.


தொடர்ந்து இந்த வழக்கில், பெண்ணை தாக்கி கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட விமல்ராஜ், கார்த்திக் ஆகிய இருவருக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனையும், தலா 5 ஆயிரம் அபராதமும் விதித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி உத்திரவிட்டார்.


குற்றவாளி கார்த்திக் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், கார்த்திக்கை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here