தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்தது.
15 முதல் 30 வயது உள்ளவர்கள் இளைஞரணியில் உறுப்பினராகலாம் என்ற விதியை மாற்றி, 18 முதல் 35 வயதுள்ள இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்க்கலாம் என்று தலைமைக் கழகம் ஒப்புதல் வழங்கியுள்ளதால், உறுப்பினர்கள் அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய உறுப்பினர் அட்டை உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
‘கட்சியில் இளைஞர்களை சேர்ப்பதற்காக விரைவில் செல்போன் ஆப்(செயலி) தொடங்க உள்ளோம். இளைஞரணி சார்பில் தமிழகம் முழுவதும் மோசமாக உள்ள நீர் நிலைகள் தூர்வாரப்படும். இதற்கான பணி திருக்குவளையில் இருந்து தொடங்கப்படும்’ என்றார் உதயநிதி.












