மதுரை கூடல்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் ஆறுமுகம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.அவர் கூடல் நகர் அருகே பொதிகை நகரில் பதுங்கியிருந்த கும்பலை சுற்றி வளைத்த பிடித்தார்.அவர்களில் 3 பேர் பிடிபட்டனர் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்
.பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் மீனாட்சிபுரம் சங்கர் லயன்ஐந்தாவது தெருவைச் சேர்ந்த ரவி 35 ,கே.வி.சாலைஇந்திரா நகர் 2-வது தெருவைச் சேர்ந்த விக்னேஷ்27,தத்தனேரி மெயின்ரோடு அருள்தாஸ்புத்தை சேர்ந்த மணிவண்ணன் 34 என்பது தெரியவந்தது.மூவரையும் கைது செய்தனர். தப்பி ஓடிய மருது, குமாரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் கொள்ளையடிக்கும் திட்டத்துடன் பதுங்கி இருந்தது தெரியவந்தது.