கொரோனா பயத்தில் செவிலியர் தற்கொலை:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் சாலையில்
தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தவர் சுப்புலட்சுமி(27). இவருக்கு, கடந்த 3 நாட்களுக்கு முன் கொரோனா பாசிட்டிவ் என வந்த நிலையில், தான் பணிபுரியும் மருத்துவமனையிலேயே , சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந் நிலையில், மருத்துவமனையில், கொரோனா பயத்தால் தனது அறையில் அவர்,
தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் .
இது குறித்து பேரையைர் காவல் நிலையத்தினர், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.













