திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் பகுதியில் கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி ஜாமீனில் வெளிவந்த வெங்கடேசன் என்பவரை முன்விரோதம் காரணமாக மதுசூதனன் என்பவர் தன் நண்பர்களுடன் சரமாரியாக வெட்டி கொலை செய்தார்.
இந்த வழக்கில் தொடர்புடைய வல்லரசு, ஏழுமலை, வினோத், மதி, வசந்த் மற்றும் சுரேஷ் ஆகிய 6 நபர்கள் மீது புதுப்பாளையம் காவல்துறையினர் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.














